கல்லானும் உனைக் கண்டால்
காதல் கவிப்பல பாடுவான்
கார்ல்மார்க்ஸ் உனை யடைய
தனி யுடமைப் பேசுவான்
மகாக்கவி எழுதிய தூரியக்கோல்
போல் கூரியக்கண்கள் உனது
உன்மலர் முகங்கண்டால் மகா
கவியெழுதும் கைகள் எனது
கண்ணதாசனை உந்தன் தாசனாக்கும்
கார்மேகக் கூந்தல் உனது
காணு மியற்க்கை அழகையெல்லாம்
ரசிப்பதிலே உனக்கு பாவேந்தன்மனது
அருங் கருத்துப்பல பேசுகின்றாய்
பட்டுககோட்டையான் போலே
உன்னை முழுமையாய்க் கவிப்பாட
வேண்டுமொருவன் கம்பனுக்கு மேலே
(குறிப்பு - காதல்கவிதை எழுத முதல்முறை முயற்சி செய்துள்ளேன்,)