வெள்ளி, ஜூலை 23, 2010

தாய்மண்ணே!


எத்தனையோ
காலந் தொட்டு

எத்தனையோ
வாழ்க்கைக் கெட்டு

எத்தனையோ
உறவை விட்டு

எத்தனையோ
உயிரைச் சுட்டு

இன்னும் எத்தனையோ
எத்தனையால் கிட்டிய

நம் சுதந்திரத்தை
நம் அத்தனின்

பெயரால் மொத்தமாய்க்
காத்துச் சுத்தனாவோம்...!