திங்கள், அக்டோபர் 17, 2011

அன்பு மனமே


ஆசையோடு பேசுகின்றாய் 
ஆறுதலை தேடுகின்றாய் 
ஆறுமனமே ஆறுஎன்று 
உனக்குநீயே பாடுகின்றாய் 

பாதிவரை வாழ்ந்துவிட்டாய்
வாழ்ந்தவரை லாபமில்லை 
மீதிவாழத்  துனிந்துவிடாய்
வாழத்துணை தேவையில்லை 

வந்தவரும் போனவரும்  
யாருமென் நினைவிலில்லை  
வருபவரும் இருப்பவரும் 
போய்விடுவார் பொய்யுமில்லை 

சொந்தமொன்றைத் தேடித்தேடி 
உன்னையேன் வாட்டுகின்றாய்
இருப்பதெல்லாம் போதாதென்று  
இன்னுமொன்றைத் தேடுகின்றாய் 

ஆசையோடு பேசுகின்றாய் 
ஆறுதலை தேடுகின்றாய் 
ஆறுமனமே ஆறுஎன்று 
உனக்குநீயே பாடுகின்றாய் 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

காண்பன யாவும்
கருத்துக்கு இசைந்ததுவே,
கருதுவதோடு கருத்தையும்
எழுதுங்களேன்..!


இவன் சக்தி..!