புதன், ஜனவரி 16, 2013

இறைவா..!


உங்கருணையில துளியளவு 
தூவிவிட்டா புவிசெழிச்சு 
பூந்தோட்ட மாகுமப்பா 

மலையளவு எம்மடியிலநீ 
போட்டுபுட்ட மனமெல்லாம் 
உங்கீர்த்தி பாடுதப்பா 

நல்லதுநாலு செஞ்சு 
தரணியில வொருகூட்டம் 
உன்வழியில வாழுதப்பா 

எம்போல் பாவியொருத்தன் 
படியேற உம்வேதம் 
ஒர்வழிய காட்டுதப்பா 

என்னிதயத்துல குடியிருக்கு 
மன்பர்பலர் பார்வையில 
இவ்வுலகமழகாய் தெரியுதப்பா 

எனக்கிட்ட பிச்சபோல 
வொருபுடிய உங்கருணையால 
அவர்மடியில போடுமப்பா 

இத்தனநாள் நாஞ்செய்யு 
தீமையெல்லாம் என்னத்தீண்டாம 
தீக்கிறை யாக்குமப்பா 

வருநாளெல்லாம் உம்புகழ் 
பாடியுனக்கோர் நல்லடிமை 
இவனென் றாக்குமப்பா...

1 கருத்து:

காண்பன யாவும்
கருத்துக்கு இசைந்ததுவே,
கருதுவதோடு கருத்தையும்
எழுதுங்களேன்..!


இவன் சக்தி..!