சனி, ஆகஸ்ட் 10, 2013

தமிழே



இயலும் இசையும் 
கொண்ட தமிழே 
இனியும் தொடரும் 
உன் நாடகமே 

வருவாய் தருவாய் 
அமுதம் காதினிலே 
படுவாய் படர்வாய் 
மொழியும் நாவினிலே 

இயல்பாய்பேச இனிப்பாய் 
என்றும் செந்தமிழே 
கனியாய் கனிவாய் 
கற்பவர் வாயினிலே 

எழுவாய் பயனிலை 
கொண்ட இலக்கணமே 
எழுவாய் தொடுவாய் 
என்நாவில் இக்கணமே.. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

காண்பன யாவும்
கருத்துக்கு இசைந்ததுவே,
கருதுவதோடு கருத்தையும்
எழுதுங்களேன்..!


இவன் சக்தி..!