ஞாயிறு, நவம்பர் 23, 2014

அவசர கவிதைகள் ...!




வந்து மறைந்த
திருமறைகள்
சில நூறு 

அனைத்தும் 
போற்றுவதில்
தாயும் ஒரு கூறு.









இருள் சேர் நேரங்கள் 
தன் நிழலையும் கொல்லும் 
முற்றிலும் இருண்டாலும் 
வாழ்வில் பொருள் சேர்க்க 
உடன் நட்பு நில்லும்.. 









தீண்டாமை இல்லாமை இயலாமை 
அறுக்கும் ஒரு கருவி கல்வி

அறியாமை புரியாமை வெல்லாமை 
விலக்கும் ஒரு விளக்கு கல்வி 

வரலாறு புரளாமல், புரண்டாலும் 
வடிக்கட்டும் வடிகட்டி கல்வி 

பாதாளம் வீழ்ந்தவனை மலை 
ஏற்றும் படிக்கட்டு கல்வி 

பலதேசம் பரதேசம் போனாலும் 
பார்போற்ற வைப்பதுவும் கல்வி 

பொருளீட்ட புகழீட்ட உயிர்காக்க 
தேசவலுகூட்ட செய்வதுவும் கல்வி 

கசடர கற்பதே கல்வி - வாழ்வில் 
கசடர செய்வதே கல்வி... 

(குறிப்பு - தோழர் தமிழ் செல்வனுக்காக அவசரமாக எழுதியவைகள் )